சிவனை வழிபடலாமா? விஷ்ணுவை வழிபடலாமா?


கேள்வி : ஆன்மீக வாழ்வில் (நிலையயில்) உயர்வடைய சிவனை வழிபடலாமா? விஷ்ணுவை வழிபடலாமா?
                                                                                      வாசுகி  சென்னை

    சிவனும். விஷ்ணுவும் தனித்தனியாகக் கூறப்பட்டிருந்தாலும் இறைவன் ஒருவன் தானே என்ற எண்ண ஓட்டத்தில் நீங்கள் இக்கேள்வியைக் கேட்டிருந்தால் அதை முற்றிலும் மாற்றிக் கொள்ளுங்கள், ஹரியும் சிவனும் ஒன்றுதான், இதில் எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, ஆனால் ஹரியகா இருக்கும்போது ஒரு செயலலையும். சிவனாக இருக்கும்போது ஒரு செயலையும் செய்கின்றான், இது எப்படி என்றால் ஒருவன் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் மகன் ஸ்தானத்தில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்கிறான் அல்லவா? நீங்கள் கேட்டிருப்பது ஆன்மீக வாழ்வில் முன்னேற யாரை வழிபடுவது என்பது தானே? எம்பெருமான் நாராயணனை வழிபடும் போது இவ்வுலக வாழ்க்கையில் துன்பங்களைக் களைகிறான், பரமேஸ்வரனை வழிபட்டாலோ பரவுலகத்திலும் ஏற்படும் துன்பத்தைக் களைகிறான், என்னைப் பொருத்தவரையில் தியானம். யோகம் ஆகியவற்றுக்கெல்லாம் சிவனே மூர்த்தி என்று கருதுகிறேன், வைணவ. சைவ பேதங்கள் எல்லாம் பக்குவமில்லாத மனிதர்களுக்குத்தான், ஏனென்றால் “இராமன் சிவபூஜை செய்கிறார்; சிவன் இராம நாமம் ஜெபிக்கிறார்”

source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_22.html



1 comments:

தனி காட்டு ராஜா said...

//தியானம். யோகம் ஆகியவற்றுக்கெல்லாம் சிவனே மூர்த்தி என்று கருதுகிறேன்//

ஆதி யோகி ,குரு சிவனே .....:-)

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்